For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவாரூரில் அதிமுக ஒன்றிய அலுவலகம் தீ வைத்து எரிப்பு

By Siva
Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அத்திகடை கிராமத்தில் உள்ள அதிமுக ஒன்றிய அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் அத்திகடை கிராமத்தில் அதிமுக ஒன்றிய அலுவலகம் அலாவுதீன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு அதிமுக அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் தீ வைத்துவி்ட்டு தப்பிச் சென்றனர். இதில் அதிமுக அலுவலகத்தின் கூரை தீப்பிடித்து எரிந்தது. அங்கு இருந்த மேஜை, நாற்காலிகள், பேனர்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி அதிமுகவினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அதிமுக பிரமுகர் அலாவுதீன் இது குறித்து கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தேர்தல் தோல்வி காரணமாகத் தான் இது நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

English summary
Some miscreants set fire to Athikadai ADMK office in Tiruvarur district. In this tables, chairs, banners and other things kept inside the office were reduced into ashes.Police have filed a case and are in search of the culprits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X