For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எத்தியோப்பியா, தான்சானியாவுக்கு 6 நாள் பயணமாக புறப்பட்டார் பிரதமர்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனி விமானம் மூலம் எத்தியோப்பியா புறப்பட்டுச் சென்றார்.

அவர் எத்தியோப்பியா, தான்சானியாவில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது தீவிரவாதம், கடற்கொள்ளையை எதிர்த்து போராடுவது பற்றி ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

பிரதமர் முதலில் அட்டிஸ் அபாபாவுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் இரண்டாவது ஆப்பிரிக்க-இந்திய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அன்மை காலமாக சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. அவர்களை ஒடுக்குவது குறித்து ஆப்பிரிக்க தலைவர்களுடன் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 26-ம் தேதி அவர் தான்சானியா செல்கிறார்.

English summary
PM Manmohan Singh has left for Ethiopia today. He is on a 6 day tour to Ethiopia and Tanzania. He will discuss about how to curb terrorism and piracy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X