For Quick Alerts
For Daily Alerts
Just In
ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு - ஜெ அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்பள உயர்வு, இதர படிகளுக்கான கோரிக்கையை வற்புறுத்தி தொடர்ந்து சுமார் 65 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தத்தை முதல்வர் ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றவுடன் வனத்துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரிலும், முயற்சியின் பேரிலும் தொழிலாளர்களுடனும் தொழிற் சங்கங்களிடையேயான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுக்கு வந்தது.
பழைய சம்பள விகிதமான ரூ.169 லிருந்து ரூ.250 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
Chief Minister Jayalalitha announced pay hike to the workers of Govt rubber estate. According to her order, the payment has raised to Rs 250 for Rs 169.
Story first published: Saturday, May 28, 2011, 10:55 [IST]