பிஇ மாணவர் தரவரிசைப் பட்டியல் ஜூன் 24-ம் தேதி வெளியீடு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு தர வரிசைப் பட்டியல் ஜூன் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் விற்பனை:
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்படிவங்கள் மே 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் விநியோகிக்கப்பட்டது.
மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 88,650 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தரவரிசைப் பட்டியல்:
அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழான இடங்களுக்கு ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
இதற்கான ரேண்டம் எண் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஜூன் 24-ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 3-ம் தேதி கடைசி நாளாகும்.