தண்டேவாடா-நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் 10 போலீசார் பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் தண்டேவாடாவில் நக்ஸல்கள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் 10 காவல்துறை சிறப்புப் படை போலீசார் பலியாயினர்.
இன்று காலை தண்டேவாடா மாவட்டம் கதிகல்யான் என்ற இடத்தில் ஒரு பாலத்தில் இந்த போலீசார் பயணித்த வேன் நக்ஸல்கள் வைத்த கண்ணி வெடியில் சித்தியது. இதில் அந்த வேன் வெடித்துச் சிதறி தூக்கி எறியப்பட்டது.
இதையடுத்து அந்த வேனை நோக்கி நக்ஸல்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
அந்த வேனில் பயணித்த 7 அதிகாரிகள், 3 போலீசார் அந்த இடத்திலேயே பலியாயினர்.
வேன் பாலத்தை அடைந்தபோது மறைந்திருந்த நக்ஸல்கள் கண்ணி வெடியை வெடிக்க வைத்துவிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதே பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நக்ஸல்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் 76 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியாயனதும், மே 17ம் தேதி இதே இடத்தில் நக்ஸல் தாக்குதலில் 40 போலீசார் பலியானதும் நினைவுகூறத்தக்கது.