For Daily Alerts
Just In
கார் விபத்தில் ஆளுநர் பர்னாலாவின் பேரன் காயம்
சென்னை: தமிழக ஆளுநர் பர்னாலாவின் பேரன் சாலை விபத்தில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பேரன் அபய் சிங் பர்னாலா. நேற்று அபய் தனது காரில் கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த கார் காதர் நவாஸ் கான் சாலை அருகே செல்கையில் கட்டுப்பாட்டை இழந்து ஒரு கடையின் சுவர் மீது மோதியது. இதில் அபய் சிங் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த காரில் அபயுடன் ஒரு பெண் உள்ளிட்ட 2 நண்பர்கள் இருந்ததாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
Comments
English summary
Tamil Nadu Governor Baranala's grandson Abhay Singh Baranala has been injured in a car accident in Chennai. Abhay's car lost control and hit a wall in which he has got head injury.
Story first published: Friday, June 10, 2011, 13:14 [IST]