மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் மீன்பிடிக்க தடை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியில் வரும் 15-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீன்களின் இனபெருக்க காலங்களில் விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்களின் இனப்பெருக்க காலங்களில் விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க 2 கட்டங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிழக்கு கடற்கரை பகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மே மாதம் 31-ம் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிக்கு வரும் 15-ம் தேதி முதல் ஜூலை மாதம் 31-ம் தேதி வரையிலும் தடைக்காலம் அமலில் இருக்கும்.
குமரி மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
மணக்குடி முதல் நீரோடி வரையான மேற்கு கடற்கரை பகுதியில் வரும் 15-ம் தேதி முதல் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது என கூறப்படுகின்றது.
தற்போது குளச்சலில் உள்ள விசைப்படகுகள் கேரளா மற்றும் குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்து வருகிறது.
இவை மேற்கு கடற்கரை பகுதியாக இருப்பதால் அங்கும் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.