For Daily Alerts
Just In
பிரஜா ராஜ்யம் - காங்கிரஸ் இணைப்பு திருப்பதியில் நடக்க சிரஞ்சீவி விருப்பம்!
நடிகர் சிரஞ்சீவி 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரஜா ராஜ்யம் என்ற பெரில் கட்சியை தொடங்கி நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். 294 உறுப்பினர்களை கொண்ட சட்டப் பேரவையில், பிரஜா ராஜ்யம் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தமது பிரஜா ராஜ்யத்தை இணைக்க சிரஞ்சீவி விருப்பம் தெரிவித்தார். இதற்கான இணைப்பு விழா திருப்பதியில்தான் நடைபெற வேண்டும் என அவர் நேற்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
பிரஜா ராஜ்யத்தின் துவக்கவிழாவைப் போன்று, பிரமாண்ட அளவில் இணைப்பு விழாவும் அமைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். எனினும், இதில் இறுதி முடிவு எடுப்பதை காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் விட்டுவிடுவதாக சிரஞ்சீவி தெரிவித்தார்.
Comments
English summary
Praja Rajyam Party chief, K Chiranjeevi on Thursday said he strongly desired to merge his party with Congress in the temple town of Tirupati where he launched his party two years ago.
Story first published: Friday, June 17, 2011, 13:10 [IST]