For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் அளிக்கும் ரூ.149 க்கு கார் செக்கப்

Google Oneindia Tamil News

Car Service
டெல்லி: ரூ.149 க்கு வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை செக்கப் செய்து கொள்ளலாம் என மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் அறிவித்துள்ளது. இந்த சலுகை வரும் செப்டம்பர் 30 ந் தேதி வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் முன்னிலை வகிக்கிறது.

நாடு முழுவதும் மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் என்ற பெயரில் அந்த நிறுவனம் யூஸ்டு கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறது.

இந்த நிலையில், தங்களிடம் யூஸ்டு கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

தற்போது பருவமழைக் காலம் துவங்கியுள்ளதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு சலுகை அடிப்படையில் ரூ.149க்கு கார் செக்கப் மேளாவை நேற்று முதல் துவக்கியுள்ளது.

வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாடி வாட்டர் வாஷ், பேட்டரி, செல்ப் ஸ்டார்ட்டர், எலக்ட்ரிக்கல் செக்கப் மற்றும் ஹெட்லைட் அட்ஜெட்ஸ்மென்ட், வைப்பர் செக்கப் ஆகிய மழைக்காலத்துக்கு தேவையான அனைத்து முக்கிய பரிசோதனைகளும் இந்த சர்வீஸ் மேளாவில் செய்யப்படும் என மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் தெரிவித்துள்ளது.

மஹிந்தி்ரா பர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தில் யூஸ்டு கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.

English summary
Mahindra First Choice offers servicing for essential parts of your car for just Rs 149/- specially for monsoon. This special offer can be availed at all MahindraFirst Choice outlets upto 30th September2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X