For Daily Alerts
Just In
மத்திய உள்துறை செயலாளராக ஆர்.கே.சிங் நியமனம்
டெல்லி: மத்திய உள்துறை செயலாளராக ஆர்.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தப்போது உள்துறைச் செயலாளராக உள்ள ஜி.கே.பிள்ளையின் பதவிக் காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடு்த்து சிங் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.சிங் மத்திய பாதுகாப்புத் துறையில் உற்பத்திப் பிரிவில் செயலராக உள்ளார்.
பிகார் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிங், கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறைச் செயலாளர் ப.சிதம்பரத்தைச் சந்தித்தார்.
இதையடுத்து அவர் உள்துறை செயலாளராக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந் நிலையில் அவரை அந்தப் பதவியில் நியமித்து மத்திய அரசு நேற்றிரவு உத்தரவி பிறப்பித்தது.
ஓய்வு பெறும் ஜி.கே. பிள்ளை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
Comments
English summary
RK Singh, a Bihar cadre senior civil service officer posted in the defence ministry, was on Friday named the new union home secretary, succeeding GK Pillai who retires at the end of June. Singh's appointment was cleared by the appointments committee of the Cabinet that met here with Prime Minister Manmohan Singh in chair.
Story first published: Saturday, June 25, 2011, 14:38 [IST]