For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுரேஷ் கல்மாடிக்கு டீ, பிஸ்கட் கொடுத்து உபசரித்த திஹார் சிறை அதிகாரி மாற்றம்

Google Oneindia Tamil News

Suresh Kalmadi
டெல்லி: காமன்வெல்த் ஊழல் தொடர்பா கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடிக்கு, தனது அறையில் வைத்து டீ கொடுத்து உபசரித்த சிறை கண்காணிப்பாளர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

திஹார் சிறையில் வரலாறு காணாத அளவுக்கு முக்கியஸ்தர்கள் பலரும் அடைபட்டுள்ளனர். கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராசா, சுரேஷ் கல்மாடி என இந்தப் பட்டியல் நீளுகிறது.

இந்த நிலையில், சிறைக் கண்காணிப்பாளர் தனது அறைக்கு சுரேஷ் கல்மாடியை அழைத்துச் சென்று டீ எல்லாம் கொடுத்து உபசரித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். டீயோடு, பிஸ்கட்டும் கொடுத்து கவனித்தாராம் அந்த கண்காணிப்பாளர்.

இதனால் சர்ச்சை எழுந்தது.இதையடுத்து அந்த கண்காணிப்பாளர் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு திஹார் சிறையின் கூடுதல் டிஜிபியான ஆர்.என்.சர்மா உத்தரவிட்டுள்ளார்.

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கியக் கைதிகளிடம் சிலர் சலுகை காட்டுவதாக ஏற்கனவே சர்ச்சை உள்ளது. கனிமொழியைக் காண வந்த அவரது தந்தை திமுக தலைவர் கருணாநிதிக்கும் நேரம் ஒதுக்கியதில் சலுகை காட்டப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் கல்மாடிக்கு டீ, பிஸ்கட் கொடுத்து சிக்கலில் மாட்டியுள்ளார் சிறைக் கண்காணிப்பாளர்.

English summary
Tihar Jail superintendent has been transferred after his hospitality towards Suresh Kalmadi. The superintendent offered Tea, Biscuits to Kalmadi in his chamber.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X