For Quick Alerts
For Daily Alerts
Just In
ராசா, அசோக் சவான் ஊழல்வாதிகள்: ராகுல் காந்தி சாடல்
உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு ஆதரவாக அம்மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. கிராமம், கிராமமாகச் சென்று விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வரும் அவர் மக்களிடையே பேசுகையில்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஊழல் செய்வது யாராக இருந்தாலும் அது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மற்றும் ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக முன்னாள் மஹாராஸ்டிர முதல்வர் அசோக் சவான் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் தான் ஒருவர் (ராசா) சிறையில் உள்ளனர்.
இதுவரை மத்திய அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து மௌனம் காத்து வந்த ராகுல் காந்தி இன்று தான் முதல்முறையாக அது குறித்துப் பேசியுள்ளார்.
Comments
English summary
AICC general secretary Rahul Gandhi has defended UPA government by telling that it has taken actions against corruption and the corrupt. He has cited the actions taken against A. Raja and Ashok Chavan in 2G and Adarsh scams.
Story first published: Friday, July 8, 2011, 16:23 [IST]