ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம்
சென்னை: மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்-வீராங்கனைகள் 12 பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டிகள் ஜூன் மாதம் 25-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடந்தது. இதில் இந்தியாவில் இருந்து 245 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் இந்தியா 79 தங்கம், 76 வெள்ளி, 97 வெண்கலப் பதக்கங்கள் வென்றது.
இந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் 12 பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர். இதில் 3 தங்கம், 2 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.
தமிழகத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் ரோலர் ஸ்கேட்டிங்கில் 2 தங்கம், 2 வெள்ளியும், அர்ச்சனா சைக்கிளிங்கில் 1 தங்கம், 1 வெண்கலமும், ஹரி சீனிவாசன் ஹேண்ட்பால் போட்டியில் 1 வெள்ளியும், கோகிலா தடகளத்தில் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.