அரசின் கூடுதல் வரி: சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது,
நிதி ஆதாரத்தினை பெருக்குவதற்காக வரி விகிதங்களை உயர்த்தியதுடன், புதிதாக பல பொருட்களுக்கும் தமிழக அரசு வரி விதித்துள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 3 ஆயிரத்து 900 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 6 வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாமாயில், சன் பிளவர் ஆயில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.5 வரை அதிகரிக்கும்.
சமையல் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரி பொதுமக்களை மிகவும் பாதிக்கும். அரிசிக்கு அடுத்தப்படியாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவது சமையல் எண்ணெய் தான். வரி உயர்வால் ஜவுளித்துறை, வணிக தொழில்நுட்பத்துறை பெரிதும் பாதிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி சமையல் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத விற்பனை வரியை அரசு கைவிட வேண்டும் என்றனர்.