For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விதிமுறை மீறல்: மதுரை துணை மேயர் மன்னனுக்கு விளக்க நோட்டீஸ்

Google Oneindia Tamil News

மதுரை: விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாக மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னனுக்கு மாநகராட்சி சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரையில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமத்து வீடு கட்டியிருப்பதாக மன்றத்தில் அதிமுக மற்றும் எதிர்கட்சி கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னனின் மனைவி பெயரில் மேலப் பென்னகரத்தில் மிகப் பெரிய காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டுள்ளது.

இந்த காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டதில் மாநகராட்சி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று கூறி மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னனுக்கு மாநகராட்சி சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

இந்த தகவலை மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டியன் உறுதிபடுத்தியுள்ளார்.

English summary
Madurai corporation has sent a notice to deputy Mayor Mannan for violating corporation rules while building a complex in the city. Madurai corporation commissioner Sebastian has confirmed this information.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X