For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செயில் நிறுவனங்கள் ரூ 70 ஆயிரம் கோடியில் விரிவாக்கம்- நிர்வாக இயக்குநர் சி.எஸ்.வர்மா

Google Oneindia Tamil News

Sail
சேலம்: சேலம் இரும்பாலை உள்ளிட்ட செயில் நிறுவனங்கள் ரூ 70 ஆயிரம் கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் என்று இந்திய இரும்பு எஃகு ஆணைய (செயில்) நிறுவனத் தலைவர் சி.எஸ். வர்மா தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பு உருக்காலையில் இந்திய இரும்பு எஃகு ஆணைய (செயில்) நிறுவனத் தலைவர் சி.எஸ். வர்மா ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது,

செயில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு ரூ 70 ஆயிரம் கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் ரூ.14,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும்.

சேலம் உருக்காலைக்காக, காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். ரூர்கேலா, இஸ்கோ, பிலாய் ஆகிய மூன்று உருக்காலைகளில் அதிநவீன உலைக்கலன் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும்.

நிலக்கரி விலை உயர்வு விரைவில் சீரடையும். அதனால் நிலக்கரி மூலம் மின்உற்பத்தியில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நமது நிலக்கரித் தேவையில் சுமார் 75 சதவீதம் வெளி நாடுகளில் இருந்தே பெறுகிறோம். நம் தேவையில் உள்நாட்டு உற்பத்தி 25 சதவீதமே. தடையில்லாமல் நிலக்கரி பெறுவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

சுரங்கத்தின் பெரும்பான்மை பங்குகள் பெற்று நமது கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் பணிகளை மேற்கொள்வதற்கு 3 நிறுவனங்களிடம் பேசி வருகிறோம் என்றார்.

English summary
All SAIL companies will be expanded, said its MD Sharma. He said that, The expansion programme will be taken in Rs. 70,000 cr investment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X