For Daily Alerts
Just In
3 போலீஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: 3 போலீஸ் உயர் அதிகாரிகளை திடீர் என்று மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சேலம் சரக டி.ஐ.ஜி. ஜி.வெங்கட்ராமன், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையிட துணை போலீஸ் கமிஷனர் ஆசியாம்மாள், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு தென் மண்டல போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) சூப்பிரண்டாக இருந்து வந்த சி.மகேஸ்வரி, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் தென்மண்டல போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
English summary
Tamil Nadu government has transferred 3 police officers. Off late TN government has been transferring IAS and IPS officers as it wants to maintain law and order strictly.
Story first published: Tuesday, July 19, 2011, 10:35 [IST]