For Daily Alerts
Just In
பஞ்சாபைச் சேர்ந்த இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை
குருஷேத்ரா: அமெரிக்காவில், தீபக் சர்மா என்ற இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதை அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள குருஷேத்ராவைச் சேர்ந்தவர், தீபக் சர்மா. கடந்த 11ம் தேதி வேலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், மர்மநபர்கள் சிலரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.
மகனை காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த தீபக்கின் பெற்றோரிடம், இந்த தகவலை, அவரது நண்பர்களில் ஒருவர் தெரிவித்துள்ளனர். கடந்த ஒராண்டாக அமெரிக்காவில் வேலை செய்து வரும் தீபக்கிற்கு யாரிடமும் முன்பகை இல்லை.
இந்நிலையில் தீபக் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்க, அமெரிக்கா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு, இந்திய அரசு வலியுறுத்த, தீபக்கின் குடும்பத்தினர் கேட்டு கொண்டனர்.
Comments
English summary
Deepak Sharma of Kurukshetra was shot dead in US on July 11, his family members said. He was shot dead by some unknown persons while returning from work in Indiana.
Story first published: Wednesday, July 27, 2011, 9:09 [IST]