மு.க.அழகிரியின் என்ஜீனியரிங் கல்லூரிக்கு அனுமதி மறுப்பு
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது தயா அறக்கட்டளை சார்பில் மதுரை சிவரக்கோட்டையில் பொறியியல் கல்லூரியை கட்டியுள்ளார்.
இந்தக் கல்லூரிக்கு மத்திய தொழில்நுட்பக் குழு அனுமதி கொடுத்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி கொடுக்காமக் தாமத்தப்படுத்தி வருகிறது. கல்லூரியில் போதிய சாலை வசதி இல்லை என்று கூறிவிட்ட அண்ணா பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கைக்கான அனுமதியையும் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் அழகிரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசு அனுமதி கொடுத்தும், மாநில அரசு மாணவர் சேர்க்கையை நடத்தவிடாமல் தடுத்துள்ளது. எங்கள் கல்லூரிக்கு போதிய சாலை வசதி உள்ளது. இதில் நீதிமன்றம தலையிட்டு அனுமதி வழங்க, அண்ணா பல்கலைக்கழகத்துகுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விளக்கம் கேட்டு தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மாநில உயர்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.