For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவாரூர் எஸ்.பி. உள்பட 6 காவல் அதிகாரிகள் இடமாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: திருவாரூர் மாவட்ட எஸ்.பி. தினகரன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தவிர மேலும் 5 காவல்துறை உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை புறநகர் கமிஷனர் ராஜேஷ்தாஸ்

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனராக ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்பு படை ஐ.ஜி.யாக இருந்த அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

புறநகர் போலீஸ் கமிஷனராக இருந்த கரன்சின்கா மாற்றப்பட்டு உணவுப் பொருள் வழங்கல் ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் எஸ்.பி. அனில்குமார் கிரி

தஞ்சை எஸ்பியாக இருந்த காளிராஜ் மகேஷ்குமார், மாற்றப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்பியாக இருந்த அனில்குமார் கிரி, தஞ்சாவூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் எஸ்பியாக இருந்த சேவியர் தனராஜ், திருவாரூர் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாருர் எஸ்பியாக இருந்த தினகரன் விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

English summary
Thiruvarur SP Dinakaran has been shifted to Villupuram. Chennai Suburban Police commissioner Karan Sinha has been shifted to Food cell IG. And Rajesh Dass is appointed as the new commissioner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X