For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாரியை முந்த முயன்ற கார் மீது கண்டெய்னர் விழுந்து ஒருவர் பலி

Google Oneindia Tamil News

சென்னை: கண்டெய்னருடன் சென்ற லாரியை முந்த முயன்ற கார் மீது, அந்த லாரியில் இருந்த கண்டெய்னர் கவிழ்ந்து விழுந்தது. இதில் காரில் இருந்த என்ஜீனியர் பலியானார். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

சென்னை அண்ணாநகர், வெல்கம் காலனியைச் சேர்ந்தவர் விக்டோபர் ராஜ் (52). சென்னை குடிநீர் வாரிய இன்ஜினியராக பணியாற்றியவர். இவரது மனைவி ஜமுனா தேவி (44); மகன் முரளிதரன்.

திருப்பதி செல்ல தீர்மானித்த அக்குடும்பத்தினர், அதிகாலை 3.30 மணியளவில் வாடகை கார் ஒன்றை அமர்த்தினர். அதில், விக்டோபர் ராஜ் குடும்பத்தினருடன் அவரது மனைவி அண்ணன் சிவசண்முகம், அவரது மனைவி தமிழரசி, மகன் அஸ்வின்குமார் இருந்தனர்.

கார் புறப்பட்ட 15 நிமிடத்தில், அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் லாரி ஒன்றை முயன்றது. அப்போது லாரியில் இருந்த கண்டெய்னர் கார் மீது கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த விக்டோபர் ராஜ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காரில் பயணித்த மற்ற யாரும் எந்த காயமும் ஏற்படாமல், உயிர் தப்பினர். லாரி ஓட்டுநரும் லேசான காயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

English summary
A container which fell on a running car killed an Engineer, travelling in the car. The dead person is Engineer Vikotber Raj. He was travelling to Tirupathi with his family. Other occupants in the car were unhurt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X