For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக மண்டல தலைவர் வி.கே. குருசாமி மீது கொலை முயற்சி வழக்கு

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல திமுக தலைவர் வி.கே. குருசாமி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மயில்முருகன் என்பவர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது முனிச்சாலையில் உள்ள காரியாலயத்தில் இருந்தேன்.

அப்போது மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல திமுக தலைவர் குருசாமி, அவரது மைத்துனர் நல்லுசாமி, மருமகன் காளீஸ்வரன் உட்பட 5 பேர் முன்விரோதம் காரணமாக என்னைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தும் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, அவர் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் குருசாமி, அவரது மைத்துனர் நல்லுசாமி, மருமகன் காளீஸ்வரன் உட்பட 5 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

வி.கே. குருசாமி ஏற்கனவே வீடு, கடை ஆக்கிரமிப்பு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Police have filed murder attempt case against Madurai City Corporation's East Zone Chairman (DMK) V. K. Gurusamy and 4 others. Gurusamy is already in the Palayamkottai prison in house and shop grabbing cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X