சென்செக்ஸ் இன்று 204 புள்ளிகள் வீழ்ச்சி!
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் இன்று இறங்கு முகம் காணப்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் 204 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ். இதன் மூலம் கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்.
காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, பங்கு சந்தையில் சென்செக்ஸ் 18,283.55 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 204.44 புள்ளிகள் குறைந்து 18,109.89 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்கு சந்தையான நிப்டி-60.25 புள்ளிகள் குறைந்து 5,456.55 புள்ளிகளாக உள்ளது.
மாருதி, சிப்லா,ஒஎன்ஜிசி, ஹீரோ ஹோண்ட உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஓரளவு நல்ல விலையில் கைமாறின.
பாரதி ஏர்டெல், ஹிண்டல் கோ , எச்டிஎப்சி, ஜிண்டால் ஸ்டீல், டாட்டா பவர், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.
அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.