For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள மாணவி பலாத்கார வழக்கு: மலையாள சினிமா இயக்குனர் உள்பட 3 பேர் கைது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாணவி பலாத்கார வழக்கில் மலையாள திரைப்பட இயக்குனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூரைச் சேர்ந்த பள்ளி மாணவி 100-க்கும் மேற்பட்டோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இது வரை 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைமறைவாக உள்ள குமரி இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்பட 25-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த மலையாள திரைப்பட இயக்குனர் ஜெஸ்பால், நடிகர் பிரஜீத், தயாரிப்பு நிர்வாகி இஸ்மாயில் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் ஜெஸ்பால் சமீபத்தில் வெளியான சேவர்படா என்ற படத்தை இயக்கியவர்.

பிரஜீத் ஏராளமான டிவி தொடர்களில், திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இவர்கள் 3 பேரும் சிறுமியை எர்ணாகுளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

English summary
Kerala police have arrested 3 persons including malayalam director Jaspal in the minor rape case. The arrested trio had sexually assaulted the girl in a lodge at Ernakulam. So far, police have arrested 72 persons in this case and are in search of more than 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X