சென்னை, புறநகர் காவல் ஆணையங்களை இணைத்து பெருநகர் காவல் ஆணையம் அமைப்பு- பட்ஜெட்
இதுதொடர்பாக பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறையின் செயல்பாட்டை சீராகவும், சிறப்பாகவும் மேம்படுத்தும் பொருட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையத்துடன், செங்கை கிழக்கு காவல் மாவட்டம் இணைக்கப்பட்டு பெருநகர் காவல் ஆணையரகம் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் 2008ம் ஆண்டு இந்த நடைமுறை மாற்றப்பட்டு சென்னைப் புறநகர் காவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டது. இதனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சென்னை பெருநகர காவல் ஆணையரகமே சிறப்பான செயல்பாட்டுக்கு உதவும் என்பதால் சென்னை மாநகர காவல் ஆணையத்துடன், சென்னைப் புறநகர் காவல் ஆணையத்தை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தக் காவல் ஆணையரகம், தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் மத்தி என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சீரிய முறையில் செயல்படும் என்றார் அவர்.