For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்டம் கண்டது பங்குச் சந்தை... இன்றும் 'சிவப்புதான்'!

By Shankar
Google Oneindia Tamil News

Mumbai Stock Exchange
மும்பை: மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி படுமோசமான பாதிப்பை இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்படுத்திவிட்டது.

என்னதான் பிரதமரும், நிதியமைச்சரும் உறுதி அளித்தாலும், பங்குச் சந்தை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தவே முடியவில்லை. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததுமே மளமளவென 400 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ், அடுத்த சில நிமிடங்களில் அதிகபட்சமாக 558 புள்ளிகளை இழந்து தடுமாறியது.

தேசிய பங்குச் சந்தை நிப்டி கடந்த ஓராண்டில் முதல்முறையாக 5000 புள்ளிகளுக்கு கீழே போனது. அதிகபட்சமாக 172.05 புள்ளிகளை இழந்தது.

மெல்ல மீண்டது...

ஆனால் 10.20க்கு மெல்ல மெல்ல மீட்சியடைய ஆரம்பித்தது. வர்த்தக நேர முடிவில் மீண்டும் ஓரளவு சமாளித்த சந்தை, 132 புள்ளிகளை மட்டும் இழந்து 16,857-ல் முடிந்தது. நிப்டி 45.65 புள்ளிகளை இழந்து 5,072-ல் நிலை பெற்றது. எப்படியோ மீண்டும் 5000 புள்ளிகளை தாண்டியதில் முதலீட்டாளர்கள் நிம்மதியடைந்தனர்.

அதே நேரம் ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் படுவீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஹாங்காங் சந்தை 6.7 சதவீதமும், டோக்யோ 4.4 சதவீதமும், சியோல் சந்தையில் 3.01 சதவீதமும், ஷாங்காய் 1.1 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.

அமெரிக்காவின் டோவ் சந்தையில் 214 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.

English summary
The stock market continued to bleed for the sixth straight day today under pressure from debt worries in the West, with the benchmark Sensex dropping 558 points in opening trade. Another benchmark index, the Nifty, slipped below the 5,000-mark for the first time since June 10, 2010, in opening trade. It was trading 172.05 points down within minutes of the opening bell at 4946.45, its lowest level since May 27 last year. But at the end of the both sensex and nifty recovered partly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X