ஞாபகார்த்தத்திற்காக தாலிபான் தீவிரவாதியின் விரலை வெட்டிய இங்கிலாந்து வீரர்!
லண்டன்: ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வதற்காக, இறந்த தாலிபான் தீவிரவாதியின் விரலை வெட்டிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் பணியாற்றினார். அவர் ஆர்கில் மற்றும் சதர்லேண்ட் ஹைலேண்டர்ஸ் காலாட்படையைச் சேர்ந்தவர்கள். இந்த படை ஆப்கானிஸ்தான் போலீசாருக்கு பயிற்சி அளித்து வந்தது.
அப்போது அந்த வீரர் தான் ஆப்கானிஸ்தானில் இருந்ததின் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ள இறந்த தாலிபான் தீவிரவாதியின் விரலை வெட்டி எடுத்துள்ளார்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இது ஒரு பெருங் குற்றமாகும். இது குறித்து நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.