சென்செக்ஸில் 213 புள்ளிகள் சரிவு!
மும்பை: அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸிலும் இன்று 213 புள்ளிகள் சரிவடைந்தன.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 16,490.78 புள்ளியாக இருந்த குறியீட்டெண், மாலையில் 16,284.98 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்கு சந்தையான நிப்டி-60.00 புள்ளிகள் குறைந்து 4,888.90 புள்ளிகளாக உள்ளது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் ஹிண்டல்கோ, எச்யுஎல், எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்றே விலை உயர்ந்தன.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் ஐடிசி, சிப்லா, மாருதி, கோல் இந்தியா, இன்போஸிஸ், டாடா பவர், ஹீரோமோட்டார்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, சன் பார்மா, பாரதி ஏர்டெல், ஜிண்டால் ஸ்டீல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் கைமாறின.
ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளும் இறக்கத்துடன் காணப்படுகிறது.