என்ஜினில் கோளாறு- சென்னையில் அவசரமாக தரையிறங்கிய இலங்கை ராணுவ விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விசாகப்பட்டனத்துக்குச் சென்று கொண்டிருந்த இலங்கை ராணுவ விமானம் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
7 பேருடன் இலங்கையிலிருந்து ஒரு ராணுவ விமானம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்துக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது வி்மானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்படவே சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.
சென்னை விமான நிலையம் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து இலங்கை விமானம் பத்திரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் இருந்தவர்கள் ராணுவப் பயிற்சிக்காக விசாகப்பட்டனம் சென்று கொண்டிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால் சென்னையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications