For Daily Alerts
Just In
சேப்பாக்கம், திருவல்லிக்கேணிக்கு புதிய அதிமுக நிர்வாகிகள்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: சேப்பாக்கம், திருவல்லிக்கேணி அதிமுக நிர்வாகிகளை மாற்றி கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தென்சென்னை மாவட்டம் சேப்பாக்கம்- திருவல்லிக் கேணி சட்டமன்ற தொகுதி அதிமுக இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஆர்.தேனப்பன் 28-9-2011 அன்று முதல் பொறுப்பில் இருந்த விடுவிக்கப்பட்டு அதில் எஸ். ஜனார்த்தனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.தேனப்பன் 89-வது வட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 91- வது வட்ட கழகப் பொருளாளர் பொறுப்பில் கம்ப்யூட்டர் குமார், தி.நகர் 125-வது வட்ட அவைத் தலைவராக ஜோதிமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
ADMK chief Jayalalithaa has appointed new functionaries for Chepauk and Triplicane. The new functionaries have taken their new positions yesterday.
Story first published: Monday, August 29, 2011, 9:59 [IST]