For Daily Alerts
Just In
எனக்கு நம்பிக்கை கொடுத்த ஜெயலலிதாவுக்கும், அனைவருக்கும் நன்றி- பேரறிவாளன் தாயார்
சென்னை: என் பிள்ளை கிடைப்பானோ, மாட்டானோ என்று செத்துப் பிழைத்து வந்த எனக்கு அம்மா ஜெயலலிதா நம்பிக்கை கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கும், எனது மகனுக்காகப் போராடி வரும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது பிள்ளை கிடைப்பானோ, இல்லையோ என்று தினசரி செத்துப் பிழைத்து வந்தேன். ஆனால் இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி எனக்குப் பெரும் மகிழ்ச்சி கொடுத்துள்ளார் அம்மா.
இதன் மூலம் எனக்கு பெரும் நம்பிக்கை கிடைத்துள்ளது. இதற்காக அம்மாவுக்கும், போராடிய அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் தழுதழுத்த குரலில்.
Comments
English summary
Perarivalan's mother Arputham Ammal has thanked CM Jayalalitha for her resolution seeking the president to commute death sentence to the Rajiv Gandhi convicts to life imprisonment. She also thanked all protesters in support of his son and two others.
Story first published: Tuesday, August 30, 2011, 13:02 [IST]