For Daily Alerts
Just In
உணவு பாதுகாப்புக்கு ரூ.85,000 கோடி தேவை: அமைச்சர் கே.வி.தாமஸ்
டெல்லி: இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்திய உணவுக் கழகத்திற்கு ரூ. 85,000 கோடி தேவை என்று மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, மாநிலளவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியதாவது, உணவு தானியப் பாதுகாப்பு மற்றும் நிலுவைத் தொகை ஆகியவற்றிற்கு, ரூ. 85,000, இந்திய உணவுக் கழகத்திற்கு தேவைப்படுகிறது.
கடந்தாண்டுகளின் நிலுவைகள், கோதுமை பாதுகாப்பிற்கான ஊக்கத் தொகை, நெல்லுக்கு உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகிய காரணங்களால், நிதியின் தேவை அதிகரித்துள்ளது.
ஆனால், தேவைப்படும் அளவை விட குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நிதியமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், என்றார்.
English summary
The current requirement for food grain safety is Rs.85,000 crore. But the allowance from ministry of finance is short, Union Minister of State for Consumer Affairs and Food K.V. Thomas said.
Story first published: Tuesday, August 30, 2011, 14:05 [IST]