For Daily Alerts
Just In
சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிட பாமகவில் சீட் கேட்கும் ஏ.கே.மூர்த்தி!
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட பாமகவில் சீட் கேட்டுள்ளார் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இன்றும் நாளையும் மனுக்களை கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிட சீட் கேட்டு மூர்த்தி, கட்சித் தலைவர் ஜி.கே.மணியிடம் விருப்ப மனு கொடுத்தார்.
பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏ.கே. மூர்த்தி மனு தந்துள்ளார். அவர் சிறந்த மக்கள் சேவையாளர். மேயர் வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் ஆய்வு செய்து அறிவிக்கும் என்றார்.
Comments
English summary
Former state minister for Railways, A.K.Murthy has asked seat to contest in Chennai Mayor election. He submitted his willingness application to the PMK president G.K.Mani today.
Story first published: Sunday, September 4, 2011, 17:24 [IST]