For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூன்று ராஜீவ் கொலையாளிகளுக்கும் வாழ்நாள் சிறை தண்டனை-மணிசங்கர அய்யர் யோசனை

Google Oneindia Tamil News

Mani Shankar Aiyar
கும்பகோணம்: ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக வாழ்நாள் முழுவதும் அதாவது சாகும் வரை சிறைத் தண்டன விதிக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கும்பகோணத்தில், நடந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. அதிற்குப் பதிலாக இந்த மூவர் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 32 பேரையும் அவர்கள் இயற்கையாக சிறையிலேயே மரணம் அடையும் வரை தண்டனை அளிக்க வேண்டும்.

பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பையும் இதுபோலவே வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்.

உலகில் உள்ள 139 நாடுகளில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 நாடுகளில்தான் இந்த தண்டனை உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 22 நாடுகளில் 67 பேரை தூக்கிலிட்டுள்ளனர். இந்தியாவில் ஒருவர்கூட தூக்கிலிடப்படவில்லை.

ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்றால், அவர்கள் ஆயுள் தண்டனை பெற்று மீண்டும் வெளியே வந்தால், அவர்களால் வேறு பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கலாம் என்றார் அவர்.

காங்கிரஸ் தரப்பிலிருந்து ராஜீவ் கொலையாளிகளைத் தூக்கில் போட வேண்டாம் என்று முதல் குரல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajiv killers can be imprisoned for life instead of hanging, said senior Congress leader Mani Shankar Iyer. He also said, even Kasab can be imprisoned for life instead of sentenced to death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X