For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டது ஏன்- விளக்கம் தர அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

Chennai High Court
மதுரை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஜான் பாண்டியன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது கட்சி பொதுச் செயலாளரும், மனைவியுமான பிரிசில்லா பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தூத்துக்குடி அருகே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியன் 2 நாள் வல்லநாடு போலீஸ் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Madras HC has asked the TN govt to explain why the police arrested TMMK leader John Pandian. A HCP was filed by John Pandian's wife Priscilla Pandian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X