For Daily Alerts
Just In
பிரஸ் கவுன்சில் தலைவராக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு நியமனம்
மதுரை: பிரஸ் கவுன்சில் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் மார்கண்டேய கட்ஜு (65). பல வழக்குகளில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கி புகழ் பெற்ற இவர் கடந்த மாதம் 19ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இவரை பிரஸ் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சபாநாயகர் மீரா குமார் தலைமையிலான குழு கட்ஜுவை, பிரஸ் கவுன்சில் தலைவராக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரஸ் கவுன்சிலர் தலைவரான மார்கண்டேய கட்ஜு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் ஆவார்.
Comments
English summary
Supreme court retired justice Markandey Katju has been appointed as the new chairman of the Press Council of India.
Story first published: Friday, October 7, 2011, 18:01 [IST]