சூதாட்ட கும்பலுடன் தொடர்பு- 2 எஸ்.பிக்கள் உள்பட 25 புதுவை போலீஸாருக்கு நோட்டீஸ்
புதுச்சேரி: புதுவையில் சூதாட்ட விடுதி நடத்திய கும்பலின் டைரியில் தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருந்ததைத் தொடர்ந்து விளக்கம் அளிக்குமாறு கூறி 2 எஸ்.பிக்கள் உள்ளிட்ட 25 போலீஸாருக்கு புதுவை யூனியன் பிரதேச ஐஜி சர்மா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
புதுவையில் சமீபத்தில் ஒரு சூதாட்ட விடுதியில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்ததில், அதில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 எஸ்.பிக்கள், 2 இன்ஸ்பெக்டர்கள், 7 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 25 போலீஸாரின் தொலைபேசி எண்கள் அடங்கியிருந்தது.
இதுகுறித்து சூதாட்ட விடுதியை நடத்தியோரிடம் விசாரணை நடத்தியபோது இவர்களுக்கும், போலீஸாருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 25 பேருக்கும் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப ஐஜி சர்மா உத்தரவிட்டுள்ளார்.
சூதாட்ட கும்பலுடன் எஸ்.பி. முதல் கான்ஸ்டபிள்கள் வரை பலருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளதால் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரங்கசாமி அரசுக்கும் புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.