மாலேகான் குண்டுவெடிப்பு-7 பேர் இன்று ஜாமீனில் விடுதலை
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 7 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகாலமாக இவர்கள் ஜாமீன் கூட வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து 9 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதாக கோர்ட் அறிவித்தது.
கடந்த 2006ம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 5 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கோர்ட், 7 பேரை ஜாமீனில் விடுவி்க்க உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் தலா ரூ. 50,000 ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர். இவர்கள் 7 பேரும் வெளிநாடு போகக் கூடாது என்று கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.
மற்ற இருவருக்கும் வேறு குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்பு இருப்பதால் அவர்களால் விடுதலையாக முடியவில்லை.
மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, தீவிரவாத தடுப்புப் பிரிவு கோர்ட்டில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.