For Daily Alerts
Just In
கேரள மாநிலம் இடுக்கியில் லேசான நில அதிர்வு
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணை உள்ள இடுக்கி மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பூமி 2 முறை அதிர்ந்தது.
116 ஆண்டு பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. இந்த அணை விவகாரம் தொடர்பாக கேரளா மற்றும் தமிழகம் இடையே நீண்ட காலமாக பிரச்சனை உள்ளது.
இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து நிலம் 2 முறை அதிர்ந்துள்ளது. இதனால் பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று கேரள அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
English summary
Mild tremors measuring 2.7 on the Richter scale were felt in Idukki district of Kerala today. 116-year-old Mullaiperiyar Dam is located in Idukki district only. Idukki has seen 21 mild quakes since january this year.
Story first published: Wednesday, May 30, 2012, 12:17 [IST]