சென்னை மாநகராட்சி 35வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஞானசேகரன் மரணம்
சென்னை மாநகராட்சியின் 35வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஞானசேகரன்(65). கொடுங்கையூரில் உள்ள டாக்டர் அம்பேத்கார் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த மாதம் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உடல் நிலை தேறியதையடுத்து வீடு திரும்பினார்.
கடந்த 3ம் தேதி அவரது உடல் நிலை மோசமானதையடுத்து உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகி்ச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் அவரது உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது. மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற போராடியும் பலனில்லாமல் அவர் மரணம் அடைந்தார்.
காலமான ஞானசேகரனுக்கு கஸ்தூரி என்ற மனைவியும், ராஜா, இளங்கோவன், டேவிட் என்ற 3 மகன்களும், ஸ்டெல்லா, மனோ என்ற 2 மகள்களும் உள்ளனர். அவரது உடலுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொடுங்கையூர் கல்லறை தோட்டத்தில் இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.