For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேடசந்தூரில் முத்தூட் நிதி நிறுவனம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

Google Oneindia Tamil News

Petrol Bomb
வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் கேரளாவைச் சேர்ந்த முத்தூட் நிதி நிறுவனத்தின் அலுவலகம் மீது ஆட்டோ டிரைவர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழர்களின் கடைகள் உள்ளிட்டவை கேரளாவில் தாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் தாக்கப்படுகிறார்கள். தமிழக வாகனங்களையும் அவர்கள் விடவில்லை.

இதையடுத்து தமிழகத்திலும் கேரளாக்காரர்களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. சென்னை, கோவை, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆலுக்காஸ் நகைக் கடைகள், டீக் கடைகள், ஸ்வீட் ஸ்டால் உள்ளிட்டவை தாக்கப்பட்டன.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரையில் முத்தூட் நிதி நிறுவனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

தமிழக வாகனங்களை கேரளாவில் தாக்குவதைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இந்த குண்டு வீச்சை நடத்தினார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

அவர் வீசிய பாட்டிலில் இருந்த பெட்ரோல் தீப்பிடிக்காமல் போனதால் அதிர்ஷ்டவசமாக முத்தூட் நிறுவன அலுவலகம் தப்பியது. அதில் இருந்தவர்களும் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Petrol bomb hurled at Muthoot finance office in Vada Madurai, near Vedasandhur in Dindigul district. No one was injured and office also escaped from major damage. An auto driver was arrested in this regard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X