2ஜி ஊழலில் சிதம்பரத்திற்கும் பங்குண்டு - சுப்பிரமணிய சாமி சாட்சியம்
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி வரும் சுப்பிரமணியசாமி, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான போது இது தொடர்பாக, சில ஆதாரங்களையும் அவர் நீதிபதி ஓ.பி. சைனியிடம் தாக்கல் செய்தார்.
சிதம்பரத்திற்கும் பங்குண்டு
ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டதில், தொலை தொடர்புத் துறை மற்றும் நிதி அமைச்சகத்திற்கு பங்கு இருந்ததாக, மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்ததாகவும் சுப்பிரமணியன் சுவாமி நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார். எனவே இந்த ஊழல் விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை மட்டும் குற்றவாளியாக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றும், சுப்பிரமணிய சாமி சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டார்.