For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருநள்ளாறு வந்தபோது புதுவை ஆளுநரிடம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக பரபரப்பு

Google Oneindia Tamil News

Iqbal Singh
காரைக்கால்: திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் கோவிலுக்கு சனிப் பெயர்ச்சியையொட்டி வழிபாடு நடத்த வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் யாரோ சிலர் பிக்பாக்கெட் அடித்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது வெறும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்ததால் பரபரப்பு அடங்கியது.

நேற்று சனிப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருநள்ளாறில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல லட்சம் மக்கள் திருநள்ளாறில் குவிந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டனர்.

அதேபோல புதுவை துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கும், திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தார். அங்குள்ள சனி பகவான் சன்னதியில் அவர் தரிசித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆளுநரிடம் யாரோ பிக்பாக்கெட் அடித்து விட்டதாகவும், அவரது பர்ஸைக் காணவில்லை என்றும் செய்தி பரவியது.

இதனால் போலீஸாரும் பரபரப்படைந்தனர். ஆளுநல் உள்ள பகுதியில் மக்களும் திரளத் தொடங்கினர். ஆனால் அது வெறும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து பக்தர்களை கலைந்து போகுமாறு கூறி போலீஸார் நிலைமையை சகஜமாக்கினர்.

வதந்தி பரப்பிய விஷமி யார் என்பது குறித்து பின்னர் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் சிக்கியதாகத் தெரியவில்லை.

English summary
A pick pocket rumour created panic in Thirunallaru temple yesterday. Somebody said that Puducherry governor Iqbal Singh purse was pick pocketed. So tension prevailes for some time. But police refuted the rumour and asked the devotees to leave the place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X