For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசிரியர் கலந்தாய்வு: உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக கல்வித்துறை மீது புகார்

Google Oneindia Tamil News

வேலூர்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி வேலூர் தொடக்கப்பள்ளி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ. சரவணன் கூறியதாவது,

தமிழக அரசின் உத்தரவின்படி நடப்பாண்டில் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்கனவே பல ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்களின் சீனியாரிட்டி மிகவும் பாதிக்கப்படுகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பத்தூரைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் தடை உத்தரவு பெற்றனர். இதனால் கடந்த 21ம் தேதி வேலூரில் நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பதவி உயர்வுப் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பாதிக்கப்பட்ட 8 ஆசிரியர்கள் இன்றி கலந்தாய்வு நடத்தி 19 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளனர். இதற்கான சான்றிதழை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜமாணிக்கமே வழங்கியுள்ளார் என்றார்.

English summary
It is told that school education department has given promotion to 19 graduate teachers in Vellore ignoring Chennai high court's stay order over the promotion. 8 teachers from Tirupathur have got the stay order and they were excluded from the promotion counselling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X