மதுரை விமான நிலையம் விரைவில் சர்வதேச விமான நிலையமாக்கப்படும்: மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்
மதுரை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வர்த்தகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அறையை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கூடங்குளம் அணுஉலையில் 3 அடுக்கு பாதுகாப்புள்ளது. உலகில் 529 அணுமின் நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களின் பொருளாதாரம், வாழ்வாதார தேவைகளுக்கு நாட்டில் அணுஉலைகள் தேவை. மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக்கும் முயற்சிகள் விரைவுபடுத்தப்படும் என்றார்.
முன்னதாக ஜி.கே. வாசனிடம் தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை துவங்க உள்ளது. ஆனால் விமான நிலைய ஒப்பந்தங்களில் மதுரை சேர்க்கப்படவில்லை. எனவே, தொழில் மற்றும் சுற்றுலா மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு விமான ஒப்பந்தங்களில் மதுரையை சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.