For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்ச்சில் பட்ஜெட் - பிரணாப் முகர்ஜி

By Shankar
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
டெல்லி: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி மார்ச் மாதத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று (ஜனவரி 25) செய்தியாளர்களைச் சந்தித்த பிரணாப் முகர்ஜியிடம் பட்ஜெட் குறித்து கேட்டபோது, "பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் தேதி குறித்து முடிவெடுக்கப்படும்," என்றார்.

மார்ச் 9ம் தேதிக்குப் பிறகுதான் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான குடியரசுத் தலைவரின் உரை நடைபெறும். ஏனென்றால், அன்று தான் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைகின்றன என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பெயர் வெளியிடுவது குறித்து கேட்டதற்கு, அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரணாப் முகர்ஜி கூறினார்.

English summary
The Union Budget may be presented around the middle of March in view of the ongoing Assembly elections, Finance Minister Pranab Mukherjee indicated on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X