For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேராசிரியர் மாயகிருஷ்ணன்தான் பிரச்சினை செய்தார்-டாக்டர் ராமதாஸ் கல்லூரி நிர்வாகம் பதில் புகார்

Google Oneindia Tamil News

திண்டிவனம் மாணவர்களிடையே வன்முறையைத் தூண்டினார் பேராசிரியர் மாயகிருஷ்ணன். இதை தட்டிக் கேட்டதால் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளார் என்று திண்டிவனம் வன்னியர் கல்லூரி பேராசிரியர் மாயகிருஷ்ணன் மீது கல்லூரி நிர்வாகம் போலீஸில் பதில் புகார் கொடுத்துள்ளது. இதையும் போலீஸார் வாங்கி வைத்துள்ளனர்.

திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் பகுதியில் டாக்டர் ராமதாஸுக்குச் சொந்தமான வன்னியர் அறக்கட்டளை சார்பில் கல்வி நிலையங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த வன்னியர் கல்லூரி.

இதில் பேராசிரியராக இருப்பவர் மாயகிருஷ்ணன். இவர் ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்,என்னை, கல்லூரி இயக்குநர் ஹரிகிருஷ்ணன், உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் தாக்கினர். டாக்டர் ராமதாஸின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து டாக்டர் ராமதாஸ், ஹரிகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் அதன் அலுவலர் மாமல்லன் என்பவர் பதில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், கல்லூரி மாணவர்களிடையே வன்முறையைத் தூண்டி விட்டார் பேராசிரியர் மாயகிருஷ்ணன். இதை நான் தட்டிக் கேட்டேன். இதையடுத்து எனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாமல்லன்.

இந்த் புகாரையும் போலீஸார் வாங்கி வைத்துள்ளனர். தற்போது புகார் கொடுத்துள்ள மாயகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tindivanam Vanniyar college has charged that Prof Mayakrishnan instigated violence among students. College administrative staff Mamallan has given a complaint with the Olakkur police. Earler Mayakrishnan had given a complaint against Dr Ramadoss and two others for attacking him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X