For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறைந்த ஆளுநர் பரூக் மரைக்காயர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

Google Oneindia Tamil News

புதுச்சேரி: மறைந்த கேரள மாநில ஆளுநரும், முன்னாள் புதுவை முதல்வருமான பரூக் மரைக்காயரின் உடல் புதுச்சேரியில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

பரூக் நேற்று மாலை சென்னையில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் இன்று அதிகாலை புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு புதுவை துணை நிலை ஆளுநர் இக்பால் சிங், முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் ஊர்வலமாக உப்பளம் முஸ்லீம் கபரஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 36 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜூன முண்டா, ஆளுநர் சையத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
Kerala Governor Farooq Maraikayar's burial was held in Puducherry this evening. His body was buried with full govt honours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X