கூடங்குளத்தில் மத்திய அமைச்சர்கள் முகாம்-காங். பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு-உச்சகட்ட பாதுகாப்பு
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக ஏற்பட்ட மோதலால் நெல்லையில் நாளை மறுநாள் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் தொடர்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 4-ந் தேதியன்று பாளையங்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடக்கிறது.
இதில் மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக போராட்ட குழுவினர் கறுப்புக் கொடி காட்டப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதே நாளில் கூடங்குளம் அருகே கூட்டப்புளி விலக்கிலிருந்து லெவஞ்சிபுரம் வரை போராட்டக்குழுவினர் கறுப்பு கொடி ஏந்தி நடைப்பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.