For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20ம் தேதி முதல் 2 மாதத்திற்கு விழுப்புரம்-காட்பாடி இடையே தினசரி ரயில்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: வரும் 20ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை விழுப்புரம்-காட்பாடி இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

விழுப்புரம்-காட்பாடி இடையே வரும் 20-2-2012 முதல் 15-4-2012 வரை தினமும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில் (வண்டி எண் 06842) காலை 8.45 மணிக்கு காட்பாடியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் காட்பாடியில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (06841) இரவு 9.45 மணிக்கு விழுப்புரத்தை வந்தடைகிறது.

இந்த ரயிலில், 6 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளும், 2 சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். விழுப்புரம்-காட்பாடி இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Southern railways has announced that special train will function between Villupuram and Katpadi from february 20 till april 15. This train will pick passengers from all the stations between Villupuram and Katpadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X